சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ரணமயுர பிரதேசத்தில் ஆரம்பம்!
Saturday, January 21st, 2017
சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டை, ரணமயுர பிரதேசத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்திகழ்வில் கலந்து கொண்டிருந்த மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்த திட்டத்தை இலங்கை நிலைபெறுமகு வலு அதிகாரசபை, தனியார் துறையினருடன் இணைந்து முன்னெடுக்கின்றது.
06 மாத காலம் வறட்சியான நிலமை ஏற்பட்டாலும் இந்த திட்டத்தின் ஊடாக மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும் என்று அமைச்சர் இங்கு கூறினார். இலங்கை நிலைபெறுமகு வலு அதிகாரசபை, தனியார் துறையினரின் பங்களிப்புடன் 10 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட உள்ளது.

Related posts:
முன்பதிவு செய்வது கட்டாயம் - பொது மக்களிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட கோரிக்கை!
இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி அதிகரிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்ததால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும...
|
|
|


