11 பிரபல பாடசாலைகள் குறித்து விசாரணை – கல்வியமைச்சு!

Saturday, January 21st, 2017

நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளில் குறிப்பிட்ட 11 பாடசாலைகளுக்கு 2017ஆம் ஆண்டுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களது பெயர் பட்டியல் குறித்து விசாரணைகனளை கல்வி அமைச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி; கொழும்பு ஆனந்த, நாலந்தா,விஷாகா,நுகேகொட அனுலா,கண்டி தர்மராஜ,கண்டி பெண்கள் கல்லூரி,குருநாகல மலியதேவ,மலியதேவ பெண்கள் கல்லூரி,காலி மஹிந்த,சங்கமித்தா மற்றும் மாத்தறை ராஹுல ஆகிய பாடசாலைகளே இதில் உள்ளடங்குகின்றன.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்செர்க்கும் 2016/17 சுற்றறிக்கைக்கு அமைவாக பெற்றோர்களது கையொப்பத்துடனான முறையற்ற ஆவணங்கள் சாட்சியங்களாக முன்வைக்கப்படும் இடத்து குறித்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். மேலும், குறித்த மாணவருக்கு அவரது பிரதேச எல்லைக்குள் பாடசாலை ஒன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Ministry-of-Higher-Education-285x150

Related posts:

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை - நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் த...
தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை - பிரேத பரிசோதனையில் உறு...
அரிசியை இறக்குமதி செய்ய  நடவடிக்கை எடுக்காவிட்டால் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு -   விவசாயிகள் சங்கம்...