யாழ்தேவி மீது கல்வீச்சுத் தாக்குதல் ஓட்டுநர் காயம்!
Thursday, January 19th, 2017
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற யாழ்தேவி புகையிரதம் மீது இனந்தெரியாத நபர்களின் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் புகையிரத சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் தேவி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலானது மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதாக குறித்த சாரதி தெரிவித்துள்ளார். மேலும் புகையிரதத்தில் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும், அதில் சாரதியாக பணியாற்றிய 47 வயதுடைய டி.எம்.தர்மசேன காயத்துடன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா.....
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து!
நடுநிலையாக செயற்படுங்கள் - ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!
|
|
|


