உள்நாட்டு படகு சேவைகள் தொடர்பில் புதிய சட்டத்திட்டங்கள்!
Thursday, January 19th, 2017
இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டு படகு சேவைகள் தொடர்பில் புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 24 மீற்றர்களுக்கு குறைவானதும், 5 மீற்றர் அல்லது அதற்கு அதிகமானதுமான நீளத்தைக் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு படகுகள், 100க்கும் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் 20 பயணிகளுக்கான இரவு நேர தங்குதல் வசதியைக் கொண்ட படகுகள் என்பன இந்த சட்டங்களுக்கு உட்படவுள்ளன. குறித்த சட்டத்தின் அடிப்படையிலேயே புதிய வர்த்தக படகு சேவைகளும் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய சம்பூர் மக்கள் முடிவு!
இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!
|
|
|


