சீகா வைரஸால் உலகில் ரீதியில் இரண்டு பில்லியன் பேர் பாதிப்பு
Thursday, April 21st, 2016
ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துவரும் சீகா வைரஸினால் சர்வதேச நாடுகளில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நுளம்புகளினால் பரவும் இந்த சீகா வைரஸின் தாக்கம் பிரேஸில் நாட்டில் அதிகளவாக காணப்பட்டது.இது படிப்படியாக முன்னேறி தற்போது சர்வதேச நாடுகளிலும் ஊருடுவியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மார்களில் இருந்து பிறக்கும் சிசுவின் ஊடாக இந்த வைரஸ் தாக்கம் பரவிவருகின்றது.இந்த நிலையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உலகளாவிய ரீதியில் சுமார் 2.2 பில்லியன் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Related posts:
துணை மருத்துவ சேவையினரின் விடுமுறைகளால் அசௌகரியம் - சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் தெர...
உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை - பெரிய வெங்காய விவசாயிகள் க...
வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் - ப...
|
|
|


