உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
Monday, January 16th, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நூற்றுக்கு 3.5 வீதமான மாணவ மாணவியர் உயர்தரப் பரீட்சையில் இம்முறை மூன்று ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர். உயர்தரப் பரீட்சையில் 134238 பாடசாலை பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும் இது 63.36 வீதம் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 457 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கணித பிரிவில் 603 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் வர்த்தகப் பிரிவில் 3835 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கலைப் பிரிவில் 1557 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts:
தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை - திங்கட்கிழமை ஆரம்பம்!
கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்!
|
|
|


