வரி அதிகரிப்பு:  அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன் வியாபாரிகள் பாதிப்பு!

Wednesday, January 11th, 2017

அச்சுவேலி பொதுச்சந்தையில் கடலுணவுக்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு அறவிடுவதனால் மீன்விற்பனையில் ஈடுபடும், சைக்கிள் வியாபாரிகள் சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கலைமதி மீனவர் அபிவிருத்தி சங்கத்தினால், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு  மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யும் இடத்துக்கு 100 ரூபாய், கொண்டு வரப்படும் மீன்களுக்கு தலா 10 ரூபாய் தொடக்கம் 15 ரூபாய் வரை வரி செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாகவும், அப்படி செலுத்தாதவர்கள், சந்தையில் மீன் விற்பனை செய்யவேண்டாம் என அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த மகஜர் கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் மீன் வியாபாரிகள், பெரிதும் பாதிக்கப்படுவதுடன், தொழில் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன்வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

பிரதேச சபையின் நடமுறைகளுக்கு ஊடாக மீன்களுக்கான வரி அறவீடு நடமுறைப்படுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இவ் விடயத்தில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Evening-Tamil-News-Paper_57541620732

Related posts:

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை - நிர்ணயவிலையில் வ...
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
சிங்கப்பூரில் விசா எல்லையை மீறி தங்கியிருக்கும் இலங்க்சியர் தொடர்பில்  விடுக்கப்பட்ட அவார செய்தி!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படும...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் க...
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல் தாமதமாகும் அபாயம் உள...