24 ஆம் திகதிவரை விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!
Tuesday, January 10th, 2017
அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சமந்த லொக்குஹென்னகேவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றார்.
அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யாழில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி!
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்க்கமான தினங்கள் கடந்து செல்கின்றன - விமல் வீரவங்ச!
அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் - அமைச்சரவையும் அங்கீகாரம்!
|
|
|
லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறு...
தொடர் மழை - கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!
7 ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை 4ஆம் திகதிமுதல் ஆரம...


