உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!
Tuesday, January 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏழாலை தொந்தனை பகுதி மக்களுக்கு குளாய்க்கிணறு அமைப்பதற்கான நிதி உதவி வழங்கிவைக்கப்படுள்ளது.
கட்சியின் பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதியினர் விடுத்திருந்த கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசென்றதன் அடிப்படையில் குறித்த திட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கமைய இன்றையதினம் உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் சந்திரன் (வலன்ரயன்) அவர்களால் பயனாளிக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்து.

Related posts:
இலங்கை மருத்துவ சபைக்கு சட்ட ஆலோசனை!
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
|
|
|


