மீனவரை தேட மாலைத்தீவின் உதவியை நாடும் இலங்கை!
Monday, January 9th, 2017
ஒலுவில் துறைமுகத்திலிருந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளுக்காக மாலைத்தீவு பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் கடந்த புதன் கிழமை மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டார். கல்முனையிலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆறு பேரில் இருவர் மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
ஹாஜா மொஹைதீன், முஹமட் அர்ஜீல் ஆகியோரே மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்திருந்தார்.

Related posts:
நாடு முழுவதும் நடமாடும் பொலிஸ் நிலையங்கள் - பொலிஸ்மா அதிபர்!
இயக்கச்சியில் குண்டு வெடிப்பு - ஒருவர் படுகாயம் - வெடிகுண்டு தயாரிப்பு முயற்சி என சந்தேம்!
மக்களின் நம்பிக்கையை இழக்கும் காவல்துறை - ஒழுக்கம் பேணவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலி...
|
|
|
கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண...
உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளது - சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக...
தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள மு...


