காலநிலை சார்ந்த சவால்களை வெற்றி கொள்ளத்திட்டம்!
Saturday, January 7th, 2017
காலநிலை சார்ந்த சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய பல்வேறு வேலைத்திட்டங்கள் இவ்வாண்டில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரவலயத்தில் தரிசு நிலங்களாக காணப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வயல் காணியில் பயிர் செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் பி.விஜரட்ன தகவல்தருகையில் இதற்கான வேலைத் திட்டம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய ஈரவலயத்தில் உள்ள காணிகளில் கூடுதலாக பயிர்ச்செய்கை மேற்கொள்வது பற்றி கவனம் செலுத்தப்படும்.
இதே வேளை வறட்சியான காலநிலையினால் கடந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த செயலாளர் எதிர்பார்க்கப்பட்ட அறுவடைiயில் 60 சதவீதம் மாத்திரமே கிடைத்ததாக கூறினார்.

Related posts:
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...
இலங்கையில் அணு மின்சார உற்பத்தி - முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு - அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அ...
|
|
|


