நீரில் மூழ்கி யாழில் இருவர் உயிரிழப்பு!
Wednesday, December 28th, 2016
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் கடல் மற்றும் குளத்தில் நீராடிய ஒன்பது வயதுச் சிறுவனொருவனும், ஆசிரியரொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மாதகல் இளவாலைத் துறைப் பகுதியில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆசிரியரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர் யாழ்.இளவாலை சென். ஹென்றீஸ் பாடசாலையின் ஆசிரியராவார்.
யாழ்.கந்தரோடைப் பகுதியிலுள்ள பினாக்காய்க் குளத்தில் நேற்று மாலை மூன்று சிறுவர்களுடன் நீராடச் சென்ற அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதான பரமேஸ்வரன் சாருஜன் என்ற சிறுவனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். மேற்படி இரு உயிரிழப்புக்களும் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:
இலங்கையில் பொறுப்புக் கூறலை பலப்படுத்த 14 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ள யு.எஸ்.எயிட்!
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வர...
|
|
|


