சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் கைது!
Saturday, December 24th, 2016
சிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகள் மற்றும் 2 தடை செய்யப்பட்ட வலைகள் என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related posts:
செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்!
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...
கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர் தினேஷ் க...
|
|
|


