2017ல் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் -நிதியமைச்சர்
Thursday, December 22nd, 2016
2017ம் ஆண்டில் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்தின் முதலீட்டுடன் ஒன்றிணைந்த வியாபாரமாக முன்னெடுத்து செல்லப்படும். இதற்கான முதலீட்டின் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் காலப்பகுதியில் கூடுதலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கும். எரிபொருள் சுத்திகரிப்பு, கால்நடை வளங்கள், கடற்றொழில் துறை ஆகிய துறைகளில் கூடுதலான முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதன்மூலம் துரித அபிவிருத்தி நோக்கி நகர முடியும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts:
மின்கட்டண பட்டியலுக்கு பதிலாக வருகின்றது Smart meter !
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபையை வெற்றிகொண்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை - சினோபெக் நிறுவனம் அறிக்கை!
|
|
|


