வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு மீண்டும் சந்தர்ப்பம்!
Tuesday, December 20th, 2016
2017ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் இற்காக வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், போட்டியில் இணையும் அணிகள் அனைத்தும் சிறந்த வீரர்களை ஏலத்தில் விடாது அணியுடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலிங்கவை ஏலத்தில் விடாது அணியுடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மாலிங்கவிற்கு கிடைக்கபெறும் தொகையானது இந்திய ரூபாவில் 7.5 கோடி ஆகும் (ரூ. 16.425 கோடி). அத்துடன் ரயிசின் பூனே அணியில் ஆடும் திசர பெரேரா ஏலத்தில் விடப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
வங்கதேசத்தை மிரட்டி உலகசாதனை படைத்த மில்லர்!
யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணம்: அசத்தியது யூனியன் கல்லூரி பழைய மாணவர் அணி!
|
|
|


