பரீட்சை எழுத கூரிய வாளுடன் சென்றவர் குறித்து பொலிஸார் விசாரணை!
Sunday, December 18th, 2016
கூரிய வாள் ஒன்றுடன் பரீட்சை நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சையில் தோற்றுவதற்காக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரிக்கு குறித்த மாணவர் வாளுடன் சென்றுள்ளார்.
சுமார் 2 அடி நீளமுள்ள வாளை தனது குடைக்குள் அவர் மிக சூட்சுமமாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மாணவரை சோதனைக்கு உட்படுத்தி வாளை கைப்பற்றினர்.
குறித்த மாணவருக்கு இன்று பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவரின் செயற்பாடு குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மின் கட்டணம் செலுத்த முடியாத 7 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின் விநியோகம்...
மின்னல் தாக்கி வீடொன்று சேதம் - தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பிய குடும்பம்!!
மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் - எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா...
|
|
|


