சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு – ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விநியோகிக்க அரசாங்கம் முடிவு!
Friday, December 16th, 2016
சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்தாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்;.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகளுக்கு மாத்திரமன்றி, பாரிய அளவிலான ஆலைகளுக்கும் நெல் விநியோகிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதன் கீழ் ஒன்றரை லட்சம் மெற்றிக் தொன் நெல் விநியோகிக்கப்படும். இதன் மூலம் தனியார் துறை வசமிருக்கும் அரிசியும் சந்தைக்கு வந்து அரிசியின் விலை குறையக்கூடும் என்றும் திரு.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

Related posts:
மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் - விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!
இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - மாவட்ட அரச...
தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!
|
|
|


