வர்தா புயலில் 500 இலங்கையர்கள் பாதிப்பு!
Monday, December 12th, 2016
வர்தா புயல் காரணமாக இலங்கையிலிருந்து சென்னை வரையான விமான சேவையை இரத்து செய்ய ஶ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளதால் யாத்திரையை மேற்கொண்டுள்ள 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் தற்போதைய நிலை இலங்கையர்களுக்கு மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது
மேலும், புயல் காரணமாக நாளை காலை 7 மணிவரை சென்னை விமான நிலையத்திற்காக விமான சேவையை இரத்துச்செய்ய ஶ்ரீ லங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 55 ஆயிரம் பேர் கைது!
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு!
வவுனியா பல்கலைக்கழக அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!
|
|
|


