தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் விலங்குகளால் கடியுண்ட 183 பேர் நவம்பரில் சிகிச்சை!
Thursday, December 8th, 2016
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் விலங்குகளால் கடியுண்டு 183 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 152 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர். நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி(ஏ.ஆர்.வி) ஏற்றப்பட்டுள்ளது. 9 பேர் பூனைக்கடிக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மற்றும் தலா ஒருவர் குரங்கு, எலிக்கடிக்கும் இலக்காகியுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:
போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் ...
அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டை இறக்குமதி - இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ...
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்படும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்!
|
|
|


