வலி.தென்மேற்குப் பிரதேசத்தி ஒரு வாரத்தில் 32பேருக்கு டெங்கு!
Wednesday, December 7th, 2016
பருவ மழையைத் தொடர்ந்து வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 32பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவயவருகின்றது.
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் ஆனைக்கோட்டை, உயர்ப்புலம், மானிப்பாய், சாவல்கட்டு ஆகிய இடங்களில் டெங்கு தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் கிராம அலுவலர், சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரையில் ஈடுபட்டனர். டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த புகையூட்டல் போன்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts:
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவர...
அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் ...
சட்டத்தரணி சுட்டுப் படுகொலை - யாழில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
|
|
|


