மதுபோதையில் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி!
Tuesday, December 6th, 2016
மீனவர்கள் மதுபோதையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கடலில் மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.
குடி போதையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மீனவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
பிரதமருக்கு இன்று பிறந்த நாள்!
தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வ...
மின் கட்டணம் செலுத்த முடியாத 7 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின் விநியோகம்...
|
|
|


