அடுத்த வாரம் கடும் மழை!
Monday, December 5th, 2016
வடக்கு – கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தொட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும். புத்தளம், தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படும் மாலை நேரங்களில் திடீர் சூறைக்காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Related posts:
மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆணையாளர் ...
பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் - பலாலிப் பொலிஸார் இருவர் கைது!
|
|
|


