காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!
Saturday, December 3rd, 2016
நாடா புயல் காரணமாகக் காணமற்போனதாக அறிவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர் என இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு – கிழக்குக் கடற்கரையோரமாகக் கடந்த இரு தினங்களாக நடாடபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு புயல் கரையைக் கடந்தது. பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்கள் காணாமற்போனதாக நேற்று முன்தினம் அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்கள் நேற்றையதினம் கரை திரும்பியுள்ளனர்.

Related posts:
சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணுக்கு விளக்கமறியல்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
'டிட்வா" புயல் - இன்றுடன் இலங்கையை விட்டு முழுமையாக விலகும் - பிரதீபராஜா!
|
|
|


