நிறைவுக்கு வந்தது அரச சேவை தொழிலாளர்களின் போராட்டம் !
Friday, December 2nd, 2016
அரச சேவை தொழிலாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து தொழிலாளர்களும் வழமை போன்று பணிக்கு திரும்புவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவை தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் தொழில் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே செனவிரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அரச சேவை தொழிலாளர்கள் சங்கம் கடந்த நவம்பர் 02ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts:
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை - மக்கள் வாகனங்களுடன் வீதிகளில்!
இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் !
|
|
|


