பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது – நீதிமன்றம்!
Wednesday, November 30th, 2016
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வெலிகடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் இரண்டு, பாராளுமன்ற வளாகம் வரை எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு விதிக்குமாறே பொலிஸார் கோரியிருந்தனர்.

Related posts:
உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்!
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் ...
யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை - மக்கள் வாகனங்களுடன் வீதிகளில்!
|
|
|


