டிசம்பர் 7 வரை கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
Tuesday, November 29th, 2016
எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி வரை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் போதே நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது..
அரசாங்க வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்ட கருணா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை - உள்நா...
அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...
பாலர் பாடசாலைமுதல் உயர்தரம்வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க நடவடிக்கை - அடுத்த மாதம் முத...
|
|
|


