உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தலுக்கு மதிப்பளித்த அரசுக்கு நன்றி –  டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 29th, 2016

யுத்தத்தினால் உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்நீத்த தங்களுடைய உறவுகளை, நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். இதேவேளை, இலங்கை ஒலி மற்றும் ஒளிப்பரப்பு கூட்டுத்தாபங்களின் சேவைகளில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. தேசிய கீததத்தை தமிழ் மொழியிலும் இசைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

321654

Related posts:

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
இராஜதந்திர மட்ட பேச்சுக்கள் இன்னும் கைவிடப்படவில்லை - இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அம...
அமைச்சர் டக்ளஸ் அழைப்பு - ரணிலின் வெற்றியை உறுதிசெய்ய யாழ்ப்பாணத்தில் அலையென திரண்ட பல்லாயிரக்கணக்கா...

தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - டக்ளஸ் தேவானந்...
தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...