அடுத்த வாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகுறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Sunday, November 27th, 2016
வரவு செலவுத் திட்டத்தினூடாக விலை குறைப்பிற்கு ஏற்ப 07 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயறு ஒரு கிலோகிராம் 15 ரூபாவாலும் பருப்பு ஒரு கிலோகிராம் 10 ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, உருளை கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி ஆகிய பொருட்கள் 5 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 2 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரியாயு 25 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:
அரியாலை படுகொலை: உண்மைகள் அம்பலம்!
எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை - மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் ந...
வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவையின் பயண நேரத்தில் இன்றுமுதல் மாற்றம்!
|
|
|


