மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது – மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
Saturday, November 26th, 2016
அதிகவேகம், இடது பக்கத்தால் முந்த முற்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு 25000ரூபா தண்டப்பணம் அறவிடும் யோசனையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச தரத்துக்கு ஏற்ப வேகக்கணிப்பு கருவிகள் இல்லாத நிலையில் இந்த தண்டப்பணத் தீர்மானம் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த தண்டப்பணத்தின் மூலம் குறைந்த வருமானம் உடையவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும். வாகனங்களின் தராதரம் பார்த்து தண்டனைகளை நடைமுறைப்படுத்துமாறும் அச்சங்கம் அனுப்பியுள்ள கடிதம் மூலம் கேட்டுள்ளது.

Related posts:
ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!
அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு - எதிர்க் கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத...
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
|
|
|


