அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு!
Wednesday, November 23rd, 2016
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தமது சங்கம் ஏனைய பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பாடசாலை வேன் சங்கங்கள் உள்ளிட்ட குழுவினருடன் இன்று மாலை கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக, அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டென்லி பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் மட்டுமே, இவ்வாறு அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts:
கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? - சந்தேகத்தில் அரசாங்கம்!
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
மன்னார் கனியவள ஆய்வின் எதிரொலி - தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


