உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
Friday, November 18th, 2016
யாழ் மாவட்டத்தில் இம்முறை 800 க்கு மேற்பட்ட விவசாயிகள் 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு செய்கை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலிருந்தும் நெதர்லாந்திலிருந்தும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்குகள் இம்முறை இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. இதுவரையில் 167 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் முதற்கட்டமாக 325 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts:
பிரான்ஸின் கடற்படை கப்பல் இலங்கை துறைமுகத்தில்!
வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் - திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!
|
|
|


