மழையுடன் கூடிய காலநிலை நாளைமுதல் அதிகரிக்கும்!
Thursday, November 17th, 2016
நாட்டின் தென் பாதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர், மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில், குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். மேற்கு. சப்ரகமுவ, தென் மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

Related posts:
பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது - இந்தியாவின் ...
சட்டவிரோத விசா - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை!
|
|
|


