இராணுவத்தின் முன்னாள் ஆலோசகருக்கு மரண தண்டனை!!
Wednesday, November 16th, 2016
கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்த இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த முன்னாள் விளையாட்டு ஆலோசகர் தன் மனைவியை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையினால் மரண தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை மனைவியின் சடலத்தை மறைக்க முற்பட்டமைக்காக ஏழு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டதுடன் அபராதப் பணமாக ரூபா 5 ஆயிரம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts:
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!
புகையிரத திணைக்கள செலவினத்துடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்கவில்லை -அமைச்சர் பந்துல குணவர்த்தன ச...
|
|
|


