மாணவர்களுக்கான பாடப் புத்தக விநியோகம் ஆரம்பம்!
Tuesday, November 15th, 2016
பாடசாலை பாடபுத்தக விநியோக நடவடிக்கையில் 59 வீதம் நிறைவடைந்துள்ளதக கல்வி வெளியீட்டுத் திணைக்கள நூல் வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார்.
பாடபுத்தக விநியோகம் இன்றும் இடம்பெறும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே முறையில் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தரம்2, தரம்8க்கான பாடபுத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளன. என்று அவர் தெரிவித்தார். இதேவேளை பாடசாலை மாணவர்களின் சீருடை பண வவுச்சர் விநியோகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறைவடைந்துள்ளன என்று கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார். நாளை புதன்கிழமை வவுச்சர் விநியோகப் பணிகள் நிறைவடைந்து விடும். இந்த வவுச்சர்களில் சம்பந்தப்பட்ட மாகாணம், மாவட்டம், பாடசாலை ஆகியவற்றின் விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. என்று திஸ்ஸ ஹேவா விதாரண தெரிவித்தார்.

Related posts:
உலக வங்கி இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் உதவி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...
|
|
|


