விமான நிலைய மின் தடையால் பயணிகள் அவதி!
Tuesday, November 15th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குளிரூட்டி சாதனங்கள் செயலிழந்துள்ளன.
குளிரூட்டிகளுக்கு மின்சாரத்தை வழங்க பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் இயங்கவில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் மின்சாரத்தை வழங்க 4 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் விமான நிலையத்தில் இருந்த போதிலும் அவற்றில் ஒன்று மாத்திரமே நேற்றைய தினம் இயங்கியுள்ளது.

Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பான செயலணியை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!
மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல - வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!
பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
|
|
|
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...
விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவைய...


