மருதங்கேணி பிரதேசத்தில் 32 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!
Friday, November 11th, 2016
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு மேலும் 32 வீடுகள் கட்டும் பணிகள் அரம்பமாகிவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சினால் இப் பிரதேசத்திற்கென இவ்வாண்டு 312 வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. அவைக் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2ஆம் கட்டமாக 32 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதையடுத்து அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கவென மேலும் 200 வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கே.கணேஸ்வரன் விடுத்த கோரிக்கையை மீள்குடியேற்ற அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை மீள்குடியேற்ற அமைச்சு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:
தகுதியற்ற தராதரங்களுடன் பணியாற்றிய 20 ஆசிரியர்கள் பணி நீக்கம்!
கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது வாள் வெட்டு – கோண்டாவிலில் சம்பவம்!
மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|
|


