ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!
Friday, November 4th, 2016
வேலணை பிரதேச சபையால் புங்குடுதீவு பொது நூல் நிலையத்தில் பொதுமலசல கூடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது. வேலணை பிரதேச சபையால் சபைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தின் கீழ் புங்குடுதீவு நூல் நிலையத்திற்கான பொதுமலசல கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பொது நூல் நிலைய மண்டபம் புனரமைப்பு, பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப்பலகை இடல், வேலணை பிரதேச சபையின் தலைமை வளாகத்தில் வாகனங்கள் தரிப்பிட நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் என்பன மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
சட்டமா அதிபரின் தாமதம்: தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகள்!
அடுத்த வாரம் நெல் கொள்வனவு - நெல் சந்தைப்படுத்தும் சபை!
கொரோனா தொற்று – உலகில் இதுவரை 2.8 கோடியை தாண்டியது!
|
|
|


