நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
Wednesday, November 2nd, 2016
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும், அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை - பதவி விலகவும் ஆலோசனை என சுகாதார அமைச்சர் தெர...
விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர்...
|
|
|


