முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!
Tuesday, November 1st, 2016
நியமிக்கப்பட்ட ஓய்வூதிய காலத்திற்கு முன்னதாக (12 வருடங்கள்) சேவையில் இருந்து விலகிய நிலையில், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக, இலங்கை இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவத் தலைமையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கை நல்லிணக்கம் நோக்கிய பாதையில் பயணிக்கிறது – மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன்
கிளிநொச்சியில் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் கவலை!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகரிப்பு - மாவட்ட தெரிவ...
|
|
|


