அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை அடுத்தமாதம் சமர்ப்பிப்பு!
Saturday, October 29th, 2016
புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக, அரசியல் அமைப்பு பேரவையின் செயற்பாட்டு குழுதயாரித்த இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்சமர்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளரும் அரசியல் அமைப்பு பேரவையின் செயலாளருமான நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பாட்டு குழுவின் தலைமை பதவியை வகிப்பதுடன்நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் தலைவர்கள் அதன்உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இந்தநிலையில் பிரதமரின் தலைமையில் குறித்த செயற்பாட்டு குழு தொடர்சியாக கூடிகலந்துரையாடியுள்ளது. இதன்போது, தேர்தல் முறைமை, அதிகார பகிர்வு மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள்தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
இபோசபையின் விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்பு - இலங்கை போக்குவரத்துச் சபை சபையின்...
விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.....
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !
|
|
|


