கிண்ணத்தை வெல்லப் போவது யார்?
Saturday, October 29th, 2016
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகியுள்ளது..
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் இந்த கடைசிப் போட்டி இரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.5வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளார்.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 இலக்குகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று ஆடிவருகின்றது.

Related posts:
இலங்கைக்கு சர்வதேச விளையாட்டுக்களில் பங்குபற்ற தடை வருமா?
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
மீண்டும் வருகிறது இலங்கை பிரீமியர் லீக்!
|
|
|


