குடாநாட்டு விவசாயிகளுக்கு நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம்!
Friday, October 28th, 2016
யாழ் விவசாயிகளின் நன்மை கருதி முன்னெடுக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கான நிவாரண கட்டண அடிப்படையிலான மின்விநியோகம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்மாவட்டத்தில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையில் ஒரு மின் அலகிற்கு 6 ரூபா 85 சதம் என்ற ரீதியில் நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அடிப்படைக் கட்டணம் 600 ரூபாவானது 300 ரூபாவாரையில் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறி கோவை!
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!
கடத்தப்பட்ட 15 வயது மாணவியின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த கோப்பாய் பொலிஸ்!
|
|
|


