கொழும்பு – மதுரை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!
Friday, October 28th, 2016
கொழும்பு – மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை தினசரி இயக்கவுள்ளதாகவும் இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – மதுரைக்கு இடையில் இயங்கிய மிஹின் லங்கா எயார்லைன்ஸ் விமான சேவை தனது சேவையை நிறுத்தவுள்ளது. இந்நிலையிலேயே, எதிர்வரும் 30ம் திகதி முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தினமும் மதுரையிலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 3.10க்கு வந்துசேரும். பின்னர் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
வாள்வெட்டுத் தாக்குதல் - கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி - 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலைய...
தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் த...
|
|
|


