எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு !
Wednesday, October 19th, 2016
மருந்து வகைகளின் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாக சமநிலை விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய மருந்து வகைகளை நியாயமமான விலைக்கு பெற்றுக் கொள்வதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts:
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் - குடியரசு தின செய்தியில் இந்தியா த...
மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் - விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!
மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!
|
|
|


