யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின் தடை!
Wednesday, October 19th, 2016
மின் விநியோக மார்க்கங்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (20) காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வல்வெட்டித் துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணைச் சந்தி, உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந்தைக் காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
11 பேர் கடத்தல் - லெப்டினன்ட் கொமாண்டரை கைது செய்யுமாறு உத்தரவு!
பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!
ஒக்ரோபர் 01 பாதீடு நிறைவேற்றப்பட்டால் ஒக்ரோபர் 21 முதல் அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கும் - சட்ட...
|
|
|


