சீனா – வங்கதேசம் இடையே 20 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் கைச்சாத்து!
Saturday, October 15th, 2016
வங்கதேசத்தில் முப்பது ஆண்டுகள் கழித்து முதன் முறையாக சீன அதிபர் ஒருவரின் வருகையினை அடுத்து சீனா மற்றும் வங்கதேசம் இடையே சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கைச்சாத்தகியுள்ளன.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேய்க் அசீனா ஆகியோரின் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அதில், பெரும்பாலானவை சீன நிதி உதவியுடன் வரும் கட்டுமான திட்டங்களாகும்.பண்டைய வர்த்தக பாதைகளை மீண்டும் நிறுவும் பெய்ஜிங்கின் லட்சியத்தில், வங்கதேசம் சீனாவின் தவிர்க்க முடியாத கூட்டாளி என ஷி ஜின்பிங் வர்ணித்துள்ளார்.

Related posts:
சிரியாவில் மீண்டும் உதவி கொண்டுசெல்ல ஐ.நா தயார்!
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு!
சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!
|
|
|


