புலமை பரிசில் சித்தியடைந்த மாணவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
Sunday, October 9th, 2016
2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் சித்திஜ ஹிரான் சமரவிக்ரமவுக்கு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர வழங்கியுள்ளார்.
அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் குறித்த மாணவன் தனது பெற்றோர்களுடன் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை,195 புள்ளிகளைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய மாணவரான கோகுலதாசன் அபிசிகன் மற்றும் குளியாப்பிட்டிய எஸ்ஸதும சுபாரத்தி வித்தியாலயத்தின் மாணவி ருவான்யா மெத்மினி
குணசேகர ஆகியோர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் உலங்கு வானூர்தி தளத்துடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவுக் கட்டடம்!
மதிய உணவுக்கு ஆயத்தமான சிறுவன் மின்னல் தாக்கிச் சாவு: முல்லைத்தீவில் சோகம்!
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!
|
|
|


