நிதி மாநாட்டுக்குஅமைச்சர் ரவி ஆளுனர் இந்திரஜித் வோஷிங்டன் பயணம்!

Monday, October 3rd, 2016

பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தவாரம் வாஷிங்டன் செல்லவுள்ளார்.

அவருடன், நிதியமைச்சின் செயலாளர்; ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின்ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களி;ன் மாநாடுநடைபெறவுள்ளது. இதனையடுத்து 7 முதல் 9ம் திகதிவரை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைஅமர்வு இடம்பெறவுள்ளது. இதில், அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

International-Monetary-Fund-IMF-Logo-at-HQ-415x260

Related posts:

பெப்ரவரி மாத மின் பட்டியல் கண்டனமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் - மின்சக்தி மற்ற...
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...
முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம் – தரம் ஒன்று மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுற...