தடையின்றிய மின்விநியோகத்திற்கு 10 மின்பிறப்பாக்கிகள்!
Thursday, March 31st, 2016
மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு தம்மிடமுள்ள 10 மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக கொழும்பின் 10 நகரங்களில் மின்பிறப்பாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன குறிப்பிட்டார்.
2.5 கிலோ வோட் மின்வலு கொண்ட 2 மின்பிறப்பாக்கிகளும், 11 கிலோ வோட் மின்வலு கொண்ட 8 மின்பிறப்பாக்கிகளும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அவை தேசிய கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில், நாட்டில் பெய்த மழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதமாக அதிகரித்துள்ளது. நுரைச்சோலை மற்றும் கெரவலப்பிட்டி ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி நிலையங்களிலும், தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யபடுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
அரச நிறுவன பிரதானி பதவிகளுக்கு 60000 பேர் விண்ணப்பம்!
நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
இம்மாத இறுதிக்குள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்ச...
|
|
|


