சிரியாவில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் துயரம்!

Wednesday, September 28th, 2016

சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரில், விமானத் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள இரண்டு பெரிய விபத்து சிகிச்சை மருத்துவமனைகளும் செயல்படவில்லை என்று சிரியா – அமெரி்க்க மருத்துவ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

போரின் பிடியில் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போவில், மூன்று லட்சம் மக்களுக்கு வெறும் 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. காயமடைந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு கோரி்க்கை விடுத்துள்ளது.

இழந்த பகுதிகளை மீட்பதற்கு தரைவழித் தாக்குதல்களைத் துவக்குவதற்காக, சிரியப் படைகளும் போராளிக் குழுவினரும் பெருமளவில் படைகளைக் குவித்து வருகின்றனர்.

கடந்த எட்டு நாட்களாக நடக்கும் சண்டையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக கிளர்ச்சியாளர் பிடியில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தாங்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும் பொதுமக்கள் கூறியுளளனர்.

_91405594_syriaaleppo

Related posts:


சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கி...
ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ...